கிழக்குப் பல்கலைக்கழக நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

Category
Main image
Image

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் நிறுவகத்தின் இன்னிய அணியினரின் வரவேற்புடன் ஆரம்பமாகியது.

கட்புல மற்றும் தொழில்நுட்ப கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினத்தின் வரவேற்புரையினை தொடர்ந்து சர்வதேச ஆய்வு மாநாட்டின் தலைவர் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் அறிமுகவுரையை நிகழ்த்தியிருந்ததுடன் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பணிப்பாளர் உரையை நிகழ்த்தியிருந்தார்.

இணையவழி தொழில்நுட்பம் ஊடாகவும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஞானா குலேந்திரன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி சுதேஷ் மணிதிலஹே ஆகியோரும் கலந்து கொண்டு இணையவழியில் உரையாற்றியிருந்தனர்.  

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கட்புல ஆற்றுகைகள் கலைகள் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சௌமிய லியனஹே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் சென்னை கலாசேத்ரா கலைக் கல்லூரியின் வருகைதரு பேராசிரியரும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் இணைப்பேராசியருமான முனைவர் சே.இரகுராமன் தனது ஆதாரசுருதி உரையை பரதமும் ஆய்வும் என்ற தலைப்பில் இணையவழி மூலமாக நிகழ்த்தினார்.

padakutv.lk padakutv.lk

padakutv.lk

 

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.