அம்பாறை தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் நிலவிவரும் திருப்தியற்ற நிர்வாக நடை முறைகள் தொடர்பிலும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பிலும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு விசேட வேண்டுகோள்.
அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரு மாணவர்களுக்கிடையிலான கைகலப்பில் மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும், அப் பாடசாலை நிர்வாக நடைமுறைகளில் காணப்பட்டும் திருப்தியின்மை தொடர்பிலும் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெளிவுபடுத்தியதுடன் இது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாதிருப்பதற்கும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமென முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றை செவிமெடுத்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குறித்த விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மிக விரைவாக முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.
பிந்திய செய்திகள்
மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப
டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.
மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட
ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.