மாநாடு படத்தில் நடிப்பதற்கு எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம்.. அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் மாநாடு. எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் மாநாடு படத்தில் நடித்திருந்தார்கள். மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பெரிய சிக்கலுக்கு பிறகு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி அமோக வெற்றி பெற்றது.
மாநாடு படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா நடிகர், இயக்குனர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் . இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஜயின் மெர்சல் படத்தில் டேனியல் ஆரோக்கியம் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அதேபோல் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
எஸ் ஜே சூர்யா மாநாடு படத்தில் தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா பேசிய வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு என்ற வசனம் ட்ரெண்டிங் ஆனது. மாநாடு படத்திற்காக எஸ் ஜே சூர்யா 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.
இப்படத்தில் சிம்புவின் நடிப்பைவிட எஸ் ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதைதொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
பிந்திய செய்திகள்
டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.
மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட
ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி